அவன் இரண்டு கேள்விகள் வைத்திருந்தான்.
எதிர்ப்படும் எவரிடமும் கேட்டான்.
தொடர்பற்றதாகவும்
எளிதாகவும்
கேள்விகள் இருந்தன.
கேள்வியைப் போலவே
விடைகளும் எளிமையாக.
கேள்விகள் புரிந்தும்
கேளாதவர் போல் நகர்ந்தனர் சிலர்.
பதில் அறிந்தும்
சொல்லத் திராணியற்று நகர்ந்தனர் சிலர்.
மனம் வெம்பி
எதிர்கேள்வி கேட்டு நகர்ந்தனர் சிலர்.
கேள்வியிலே சிக்கி நின்றனர் சிலர்.
எவ்விதப் பதிலும்
எவரிடமிருந்தும் எழாத போது
தன்னிடமே வினவிக்கொள்ள
எஞ்சின இரண்டும் அவனிடமே.
நன்றி : உயிரோசை http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3048
No comments:
Post a Comment