Monday, July 5, 2010

சலனங்கள்

புழுவைப் போல
சலனங்கள் எங்கும் நெளிந்து கொண்டிருக்கிறது.

யார்கரமேனும் பற்ற
மழைத்தவளையாக
தன்குரல் எழுப்பினதாய் அலைகிறது.
சலிப்படையும் ஒரு கணத்தில்,
பதற்றமுற்ற ஒரு கணத்தில்
நம்மைப் பற்றிவிடுகிறது.

கணத்தில் பற்றும் மௌனம் போலன்றி
சலனங்கள் நம்மைக் கையறுநிலையில் வைப்பதில்லை.
ஒரு கொடியாக
மனதெங்கும் படர்ந்து
செயலெல்லாம் வியாபிக்கிறது.

விடுபடுதல் என்பது எளிதன்று.
விடுபடுதல் என்பது இயல்பன்று.
விடுபடுதல் என்பது விலகுதலன்று.
விடுபடுதல் தொடர் செயல்
ஒரு புழுவின் வாழ்வைப் போல்.

உதறித்தள்ளியவை
சிறு அலைதலுக்குப் பின்
பிறிதொரு கரம் கிடைக்க நம்மை விளிக்கிறது.
எச்சங்கள் நம்மை விடுவதாய் இல்லை.
சலனங்கள் எங்கும் நெளிந்து கொண்டிருக்கிறது.

நன்றி : உயிரோசை http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3122

1 comment:

  1. ம், நைஸ்..

    அது சரி....? உயிரோசை நூறாவது இதழில் ஏதும் கவிதைகளைக்காணோமே?

    ReplyDelete