Monday, December 20, 2010

தீ அணைத்த மரம்

ஒரு மரத்தைத்
தீ அணைப்பது போலத்
தனிமை எனைச் சூழ்கிறது

எல்லா குரல்களும்
மனஅறைகளை உடைத்தவண்ணம்
உள்ளே விழுகிறது

ஒரு கோர்வை போலன்றி
முத்துக்கள் உதிர்வதைப்போல்
நினைவு வெளியில்
எல்லையற்ற சொற்கள்

சொற்கள்
தனிமையைக் குலைத்தெனை எழுப்புகிறது.
தனிமையை இழந்தால்
மன அறைகளும்
நினைவெளியும் உடன் தொலைகின்றன.
தனிமை எனைச் சூழட்டும்.
தீ அணைத்த மரம் எனக்கு விருப்பமானது

நன்றி : உயிரோசை

No comments:

Post a Comment