Monday, December 20, 2010

வாழையடி வாழை

தாத்தாவிற்குக்
கனவுகள் காண்பது பிடிக்கும்.
அவருக்குக் கனவுகள் ஊட்டப்பட்டது.

தாத்தா சில கனவுகளை
மிச்சம் வைத்தார்.
அப்பாவிடம் திணிக்கப்பட்டது.

பால்யத்தையும் இளமை காலத்தையும்
கனவுகளுக்காகத் தொலைத்தார் அப்பா.

அவை நிறைவேறாமல் போகவே
எனக்குப் பரிசளிக்கப்பட்டது.

என் மனதைத் தொட்ட அவை
மூளை வரை பரவி இருந்தது.
கனவுகளைப் பற்றிய கனவுகளில்
நெடுநாட்கள் மூழ்கி இருந்தேன்.

என் இளமைகாலத்தின் முடிவில்
என்னால் இயலாதெனத் தெரிந்து
நானும்
கனவுகளைச் சேமிப்பவன் ஆகிவிட்டேன்.


நன்றி : உயிரோசை

No comments:

Post a Comment